சென்னை: கொரோனா தடுப்புப்பணிக்காக சர்வதேச விமான போக்குவரத்து தடை உத்தரவு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதியுடன் விமான சேவை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக மார்ச் முதல் சர்வதேச விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சரக்கு விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் சேவை மட்டும் தொடர்ந்து இயங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இது ஒவ்வொரு கட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகளின் போதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.