×

லேண்ட் லைனில் இருந்து மொபைல் போனில் பேச பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்: ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்

      
டெல்லி :லேண்ட் லைனில் இருந்து மொபைல் போனில் பேச பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்ற புதிய நடைமுறை வருகிற ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. லேண்ட்லைன் என்று அழைக்கப்படுகிற தரைவழி தொலைபேசியில் இருந்து எந்தவொரு செல்போன் எண்ணுக்கு பேச வேண்டும் என்றாலும் அந்த எண்களை ‘டயல்’ செய்வதற்கு முன்பாக முதலில் பூஜ்ஜியத்தை (0) சேர்த்து ‘டயல்’ செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய், மத்திய தொலைதொடர்பு துறைக்கு கடந்த மே மாதம் 29-ந்தேதி பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு மத்திய தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.இதன் படி, 2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில்(லேண்ட் லைன்) இருந்து அலைபேசிக்கு(மொபைல் போன்) செய்யப்படும் அழைப்புகளின் போது 0 அழுத்த வேண்டும்.தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் பூஜ்ஜியத்தை அழுத்தி, அழைக்க வேண்டும்.


Tags : Landline, mobile phone, zero, amal
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...