திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் திருவண்ணாமல, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என கூறியுள்ளனர். புயல் வலுவிழந்ததால் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.