×

ஒரே நாளில் 44,488 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92.66 லட்சத்தை தாண்டியது.!!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 92.66 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 44,488 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92,66,705 ஆக உயர்ந்தது.

* புதிதாக 524 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,35,223 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,367 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 86,79,138 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,52,344 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.66% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.88% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 10,90,238 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 13,59,31,545 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.



Tags : corona victims ,India , 44,488 people affected in one day: The number of corona victims in India has crossed 92.66 lakh !!!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...