பியூனோஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மாரடோனா வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மாரடோனா காலமானதாக அர்ஜென்டினா மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாரடோனாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரடோனா மறைவுக்கு முன்னணி கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.