அதி தீவிர புயலாக இருந்த நிவர், தற்போது தீவிர புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததை அடுத்து சுற்றியுள்ள மேகக் கூட்டங்களும் கரையை கடந்து வருகிறது. வலு குறைந்த நிவர் புயல் வடமேற்கில் நகர்ந்து ஆரணி, வேலூர் நோக்கி செல்கிறது. மரக்காணம் அருகே கரையை கடந்த நிவர் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.