×

தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : districts ,Pondicherry ,Tamil Nadu ,Meteorological Department Warning , Extreme thundershowers in 5 districts of Tamil Nadu, Pondicherry: Meteorological Department warns
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...