சென்னை: பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் உளவுப்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சந்தேகத்தின் அடிப்படையில் துபாயில் இருந்து வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த ஸ்பீக்கர், டி.வி உள்ளே தங்க கட்டிகள், மற்றும் தங்க பேஸ்ட் பதுக்கி வைத்திருந்தனர். இது தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஜாபர், சேலத்தை சேர்ந்த சையது, சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த முகமது முஸ்தாக், மேற்கு வங்க மாநில கவுராவை சேர்ந்த பரூக் அகமது ஆகிய 4 பேர் கைதாகினர். இவர்களிடம் இருந்து ரூ.1.38 கோடி மதிப்பிலான 3 கிலோ 228 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.