சென்னை: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மா கழகம் நிவர் புயல் கட்டுப்பாடு உதவி மையத்தை மீட்பு நடவடிக்கையாக அமைத்துள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் மையத்தின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகின்றனர். நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மின்தடை ஏற்பட்டது தொடர்பாக 730 அழைப்புகள் வந்தது.