சென்னை: சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலை அருகே உள்ள குயில் தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 2000 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு தற்போது சிதலமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ‘நிவர்’ புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் கட்டிடத்தின் பல இடங்களில் மழை நீர் தேங்கி ஒழுகுகிறது. அந்த வகையில் ‘ஜி பிளாக்கின் மூன்றாவது மாடி பால்கனி நேற்று அதிகாலை திடீரென மழை காரணமாக பெயர்ந்து விழுந்தது.