சென்னை: நிவர் புயல் காரணமாக 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கான 12 விமான சேவைகள் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து பெங்களூருக்கு காலை 7.55 மணி, பிற்பகல் 2.45 மணி, இரவு 7.05 மணிக்கு செல்லும் 3 விமானங்களும், மங்களூருக்கு பகல் 1.45 மணிக்கு செல்லும் விமானம், விஜயவாடாவுக்கு மாலை 4.30 மணிக்கு செல்லும் விமானம், கண்ணூருக்கு இரவு 7.10 மணிக்கு செல்லும் விமானம், கோழிக்கோட்டிற்கு பகல் 1.30 மணிக்கு செல்லும் விமானம் மொத்தம் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த 7 விமானங்கள் சென்னைக்கு வருவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 3 விமானங்கள், ஐதராபாத், பெங்களூரு விமானங்கள் என மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.