சென்னை: புதுச்சேரிக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூருக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 85 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. மரக்காணம், கல்பாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிதீவிர புயலின் தாக்கத்தை உணர முடியும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென குறையும், அதனால் புயல் கடந்து விட்டதாக எண்ண வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.