×

தமிழகத்தை நெருங்கிய நிவர் புயல்: சென்னையில் இன்று இரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து..!

சென்னை: நிவர் புயல் காரணமாக இன்று இரவு 7 மணி முதல் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடப்பதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு மிக அருகில் 200 கி.மீ. தொட்டு இருக்கிறது. இந்த  நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்களானது இயக்கப்படும். அதே சமயம், காற்று, மழை ஆகிய சூழலை பொறுத்து ரயில்கள் இயக்கமானது மாறுப்படக்கூடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து, நிவர் புயலின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இன்று இரவு 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* சென்னை விமான நிலையம் மூடல் !

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு இயற்கை சீற்றத்தால் சென்னை விமான நிலையம் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : storm ,Nivar ,Tamil Nadu ,Metro ,Chennai , Tamil Nadu, Nivar storm, flight, metro rail, services, cancellation
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...