கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘வேல் யாத்திரை என்பது பாஜவின் மதவெறி யாத்திரை. தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் யாத்திரை. நீதிமன்றம் தடை செய்த யாத்திரையை மாநில அரசு கண்டுகொள்ளாமல் அனுமதிக்கிறது. காலையில் யாத்திரை, மாலையில் கைது என்று போலி நாடகம் நடக்கிறது. பழநியில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாத ரோப்கார், வின்ச் ஆகியவை பாரதிய ஜனதா கட்சியனருக்காக இயக்கப்படுகிறது. பாஜ கட்டுப்பாட்டில் அறநிலையத் துறை உள்ளது என்றே தோன்றுகிறது.