கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த 5வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அனிருத் தபா கோல் அடித்து சென்னைக்கு முன்னிலை ஏற்படுத்தினார். 25வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னையின் இஸ்மா கோல் போட்டார். இதனால் 2-0 என சென்னை முன்னிலை வகித்தது. 37வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். முதல் பாதியில் 2-1 என சென்னை முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.