சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் வகையில் தங்களின் கவனத்தை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அந்தவகையில், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ.152ம், பவுனுக்கு ரூ.1,216 வரையும் அதிகரித்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது