சென்னை : நிவர் புயலின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிக்கும் பொது மக்களை முகாம்களில் தங்க வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலின் மையப்பகுதி நகர்ந்த பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால் மின் கம்பங்கள், பயிர்கள், குடிசை வீடுகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது . இது போன்ற அபாயகரமான நேரங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.