சென்னை : நிவர் புயலையொட்டி இன்று சூழ்நிலைக்கேற்ப டாஸ்மாக் மதுபான கடைகளை மூடிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவை கடைபிடிக்க மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.