சொல்லிட்டாங்க...

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்  என்பது யாருக்கும் தெரியாது. அது, நம் கையில் இல்லை. இந்த விஷயத்தில் சிலர்  அரசியல் செய்கின்றனர். - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் அமெரிக்கா, ஜெர்மனி மருத்துவ நிறுவனங்கள் பபைசர், பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தின் தேவைக்கு அவசியமிருக்காது. -  மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்

டெல்லியில் 3ம் கட்ட கொரோனா அலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், காற்று மாசுதான். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

நம்நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்துச் செல்வதற்கு அமைதியாக வழியமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: