ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்பு இருந்தது. மரணத்திலிருந்து நான் மீண்டு வந்தேன் என்றார் நடிகர் ராணா. பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த ராணா, இப்போது தமிழ், ெதலுங்கில் உருவாகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சாம் ஜாம் என்ற டிவி நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்குகிறார். இதில் சமீபத்தில் ராணா பங்கேற்றார். அப்போது தனது உடல் நிலை பாதிக்கப்பட்டது குறித்து ராணா கூறியதாவது: என்னை பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு யூகிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்து எனக்கும் அலுத்துவிட்டது. நான் நலமாக இருக்கிறேன். அதனால் என் உடல்நலம் குறித்த வதந்திகள் ‘போர் டாபிக்’. நான் எப்பொழுது ஐதராபாத்தில் இருந்து கிளம்பினாலும் மக்கள் ஏதாவது பேசுகிறார்கள்.