கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக திரையுலகம் முடங்கி உள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்புகள் நடக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள். பெரிய பட்ஜெட் படங்கள் வௌிவருவதில் தயக்கம் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு திரைத்துறையை மீட்டெடுக்க தெலங்கானா அரசு, தெலுங்கு திரைப்படத்துறைக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.அதன்படி 10 கோடி பட்ஜெட்டுக்குள் தயாராகும் படங்கள் வெளியாகும்போது டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.