பொன்னேரி: மீஞ்சூரில் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூரில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் மீஞ்சூரில் தங்கியிருந்த இளம் பெண்ணை பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் பப்பியா கோஷ் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக தங்கியிருந்த அந்த பெண்ணை மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.