சர்ச்சைக்குரிய சட்டம் வாபஸ் பெறப்படுகிறது பினராய் அறிவிப்பு

திருவந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று அளித்த பேட்டி: கேரள அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இதில்,  கேரள போலீஸ் சட்டம் 118 ஏ இல் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்ட அவசர சட்டத்தை வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி ைவக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமூக இணையதளங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்தவே இந்த சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: