திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் நாளை (26ம்தேதி), நாளை மறுநாள் (27ம்தேதி) என 2 நாட்கள் இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500 விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திருச்சியிலிருந்து அய்யாக்கண்ணு தலைமையில் 150 விவசாயிகள் நேற்று காலை ரயிலில் புறப்பட தயாராக இருந்தனர்.