சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் அணி வீரர்கள் அதற்கென தயாராகி வருகின்றனர்.
கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்த தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அவர் நாதன் லியோன் இருவரும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜஸ்பிரீத் பும்ரா, ``சிறப்பான அணியுடன் விளையாடும்போதுதான் நம்மிடம் இருக்கும் சிறப்பான திறமைகள் வெளிப்படும்.