சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் உதவி ஆணையர் சித்ரா தேவி வெளியிட்ட அறிக்கை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் பவுர்ணமி நாளான 29ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஆதிபுரீஸ்வரருக்கு மஹா அபிஷேகம் மற்றும் புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். 30ம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கவசமின்றி மூலவர் தரிசனம் செய்ய இயலும். டிச. 1ம் தேதியன்று இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் கவசம் மீண்டும் அணிவிக்கப்படும். கொரோனா தொற்று காரணமாக விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்கள் அனைவரும் கொரோனா நோய் இன்மைக்கான சான்று கொண்டு வர வேண்டும். ஆதார் அட்டை நகல், முகக்கவசம் அவசியம்.