அனைவர்க்கும் தெரிந்த பொதுவான கதைகளில் ஒன்று காகம் தண்ணீர் குடித்த கதை. தாகத்தோடு அலைந்த காகம் ஒன்று பானையில் அடியில் இருக்கும் தண்ணீரை மேலே கொண்டுவருவதற்காக கற்களை மண்பானையில் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் காகம் அந்த தண்ணீரை குடிக்கும். புத்திசாலி காகத்தின் கதை என்று இந்த கதை பெரும்பாலும் அனைவர்க்கும் கதையாகத்தான் தெரியும்.