சென்னை: நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இருமார்க்கத்திலும் இயக்கப்படும் 24 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்பணிவு செய்த முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.