மதுரை: பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பர் என குழந்தைகள் பாதுகாப்பு அணைய தலைவரை நியமிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். குழந்தைகள் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க அரசு உதவ வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அணைய தலைவரை நியமிப்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.