அண்ணா நகர்: வரதட்சணையாக ரூ.6 லட்சம் பணம் கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதால் மனைவி சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி, ஏழாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (38). இவர் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு லாவண்யா (34), என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இருவரும் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு ரூ.6 லட்சம் பணம் வரதட்சணையாக வேண்டும் என்று விஜய் கேட்டதாக கூறப்படுகிறது.