ரூ6 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை; சானிடைசர் குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: அண்ணாநகரில் பரபரப்பு

அண்ணா நகர்: வரதட்சணையாக  ரூ.6 லட்சம் பணம் கேட்டு கணவர் கொடுமைப்படுத்தியதால் மனைவி சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி, ஏழாவது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (38). இவர் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு லாவண்யா (34), என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இருவரும் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தனது மனைவியிடம் தனக்கு ரூ.6 லட்சம் பணம் வரதட்சணையாக வேண்டும் என்று விஜய் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த லாவண்யா வீட்டில் இருந்த சனிடைசரை எடுத்து குடித்து குடித்துள்ளார். இதையடுத்து லாவண்யாவை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: