சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி துப்பரவு ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஞ்சம்பாக்கம் மயானத்தில் 233 உடல்களை தகனம் செய்வதற்காக கட்டணத்தை கேட்டிருந்தார். ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய விக்னேஷ்வரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.