×

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயார்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள இந்திய கடற்படை  தயாராக உள்ளது. 5 வெள்ள நிவாரண குழுக்கள் மற்றும்  ஒரு  டைவிங் குழு சென்னையில்  தயாராக உள்ளது. மேலும், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளம் ஆகிய பகுதிகளில் கடற்படைப் பிரிவை சேர்ந்த  வெள்ள நிவாரணக் குழு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் கடற்படையை சேர்ந்த கப்பல்  ஐ.என்.எஸ் ஜோதி  தேவைக்கேற்ப உதவிகளைச் செய்ய அனுப்பி வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indian Navy ,storm ,Nivar ,Bay of Bengal , Bay of Bengal, Nivar storm, Indian Navy
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...