சென்னை: நிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாகை, கடலூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் 465 அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அவசர ஊர்திகள் அழைக்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.