புதுச்சேரி: நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உத்தரவிட்டுள்ளார். இன்று இரவு முதல் 26-ம் தேதி காலை 6 மணி வரை புதுச்சேரியில் முழ ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.