சென்னை: தென்காசியில் கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களில் பிசான சாகுபடிக்கு வருகின்ற நவம்பர் 26ம் தேதி முதல் அடுத்த வரும் மார்ச் 30ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், 32,024.58 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.