சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க நேரில் ஆளநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 7 பேரை விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்து 2 ஆண்டு ஆகியும் ஆளநர் முடிவெடுக்காத நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் ஆன நிலையில் மேலும் தாமதம் செய்யக்கூடாது என ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார். தன்னை விடுவிக்க பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. பேரறிவாளன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.