சென்னை: நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பஸ் சேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.