காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம், இந்திரா நகரில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் மோசடி செய்த பெண்ணிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு அளித்னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம், இந்திரா நகரில் வசித்தவர்கள் தமிழ்ச்செல்வி, சிவமூர்த்தி, சீனுவாசன், வசந்தா. இவர்கள் கூட்டாக சேர்ந்து மாத சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தினர். இதில் எங்கள் பகுதியை சேர்ந்த சுமார் 42 பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு கட்டி சுமார் ரூ.3 கோடி வரை கட்டியுள்ளோம். ரூ.5 லட்சத்தில் 17 சீட்டு, ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்தில் 18 சீட்டு வரையும் கட்டி உள்ளோம்.