பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று மாலை பாஜவின் வேல் யாத்திரை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி பாஜ மாநில தலைவர் முருகன், துணை தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். முன்னதாக வின்ச் நிலையத்தில் பாஜ தொண்டர்கள் தங்களையும் வின்ச்சில் அனுமதிக்க கோரி கேட்டை தாண்டி குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் உள்பட 50 பேர் மட்டுமே வின்ச்சில் மலைக்கோயில் சென்றனர்.