சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாமகவை சேர்ந்த மாநில பாட்டாளி சமூக ஊடக பேரவை துணைத் தலைவரும், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளரும்- மாவட்ட துணைத் தலைவருமான சி.சரவணன் தலைமையில், பாமக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.இளவரசன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.தாண்டவன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன், தர்மபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எம்.சேட்டு (எ) சின்னசாமி, தர்மபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சதீஷ், மல்லசமுத்திரம் கிளைச் செயலாளரும், ஊர்த் தலைவருமான கே.சின்னசாமி, கம்பைநல்லூர் பேரூர் முன்னாள் அவைத்தலைவரும், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் அவைத்தலைவருமான என்.சின்னசாமி, மல்லசமுத்திரம் கிளைச் செயலாளர் சக்திமுருகேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கம்பைநல்லூர் பேரூர், 15வது வார்டு செயலாளரும், தொழிலதிபருமான ராமச்சந்திரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.