மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று  தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாமகவை  சேர்ந்த மாநில பாட்டாளி சமூக ஊடக பேரவை துணைத் தலைவரும், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் செயலாளரும்- மாவட்ட துணைத் தலைவருமான சி.சரவணன் தலைமையில், பாமக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.இளவரசன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.தாண்டவன்,  தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன், தர்மபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எம்.சேட்டு (எ) சின்னசாமி, தர்மபுரி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சதீஷ், மல்லசமுத்திரம் கிளைச் செயலாளரும், ஊர்த் தலைவருமான கே.சின்னசாமி, கம்பைநல்லூர் பேரூர் முன்னாள் அவைத்தலைவரும், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் அவைத்தலைவருமான என்.சின்னசாமி, மல்லசமுத்திரம் கிளைச் செயலாளர் சக்திமுருகேசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கம்பைநல்லூர் பேரூர், 15வது வார்டு செயலாளரும், தொழிலதிபருமான ராமச்சந்திரன் ஆகியோர்  திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ.,  துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., எ.வ.வேலு எம்.எல்.ஏ., எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், மதி, கம்பைநல்லூர் பேரூர் முன்னாள் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: