×

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கும்: தடுப்பூசி திட்டக்குழு தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் தகவல்..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11ம் தேதி அல்லது 12ம் தேதி முதல் தொடங்கும் என கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் தகவல் தெரிவித்துள்ளார்.. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா, இதுவரை 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2.62 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது மற்றும் பல நாடுகள் தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசிகளை தயாரிக்க முயற்சிக்கின்றன.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி  குறித்து அமெரிக்காவிலிருந்து ஒரு நல்ல செய்தி வந்துள்ளது மற்றும் டிசம்பர் 11 அல்லது 12 முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பணிகளை தொடங்கலாம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் கூறுகையில்., அனுமதி பெற்ற 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி திட்ட தளங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். எனவே, ஒப்புதல் பெற்ற பிறகு, தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி பெற அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரும் அதன் ஜெர்மன் நிறுவனமுமான பயோஎன்டெக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) விண்ணப்பித்துள்ளன. தடுப்பூசி ஒப்புதல் குறித்து விவாதிக்க எப்டிஏ ஆலோசனைக் குழு டிசம்பர் 8 முதல் 10ம் தேதி வரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Corona Vaccine Program ,United States ,Vaccine Program Committee , USA, Corona, Vaccine
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்