பொன்னேரி: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(50). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் எதிரே உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பிஸ்கட் பாக்கெட். சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ₹3 ஆயிரம் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.