பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன்(38). இவர் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் அவருக்கு சொந்தமான லாரியை நிறுத்தி வைத்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியை காணவில்லை. இதுகுறித்து திருவேற்காடு போலீசில் புகாரளித்தார். திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை தேடினர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் திருடப்பட்ட லாரி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.