உத்திரமேரூர்: உத்திரமேரூர் சின்ன நாராசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவிதா (33) இவரது கணவர் அன்பு. கவிதா நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் ராயர் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு தனிமையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தேரடித் தெரு அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவிதாவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்திலிருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.