×

சொல்லிட்டாங்க...

ஆட்சியாளர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் கேட்பீர்களோ அல்லது கேட்க மாட்டீர்களோ. ஆனால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

சமூக வலைதளங்கள் மூலம் சிலர் எல்லைமீறி தனிப்பட்ட நபர்களை தரக்குறைவாக தாக்குவதால், ஆபாசமான கருத்துக்களை தெரிவிப்பதால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ஜிஎஸ்டி வரி பாக்கியை தர மறுப்பது, மாநில அதிகாரங்களில் தலையிடுவது என தமிழ்நாட்டுக்கு பாஜ அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.
- விசிக தலைவர் திருமாவளவன்.

அதிமுக, பாஜ கூட்டணி சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற முதல்வர் எடப்பாடியின் கனவை கலைக்க விரும்பவில்லை.
- இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்.

Tags : Ramadass, Binarayi Vijayan, Thirumavalavan, Mutharasan
× RELATED புதிய ஆளுநரை திரும்பப்பெற திருமாவளவன் வலியுறுத்தல்