சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க கோரி எந்த வடிவத்தில் போராட்டத்தை நடத்துவது என்பது தொடர்பாக பாமக, வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் நேற்று இணையவழியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் கூட்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.