டொரன்டோ: இந்தியாவின் வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட அன்னப்பூரணி தேவி சிலை தற்போது கனடா நாட்டில் உள்ள ரெஜினா பல்கலைக் கழகத்தின் தொகுப்பான மெக்கன்சி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தனது பொருட்காட்சி ஒன்றை அங்கு வைப்பதற்காக சென்ற திவ்யா மெக்ரா என்ற கலைஞர் அன்னப்பூரணி தேவியின் சிலை அங்கிருப்பதை கண்டார். இது குறித்து கேட்ட போது, 1913ம் ஆண்டு மெக்கன்சி இந்தியா சென்ற போது வாங்கி வந்ததும், கங்கை நதிக்கரை படிக்கட்டில் அமைந்துள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.