நன்றி குங்குமம் தோழி
* முப்பது வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக் கொண்டால், தொடர் விக்கல் நின்றுவிடும்.
* அரை ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு உமிழ்நீர் ஊறும்படி மெதுவாகச் சுவையுங்கள். விக்கல் பறந்து போகும்.* கொட்டாவி விடுவது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான். நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவி போய் விடும்.* குளிக்கும் தண்ணீரில் ஒரு தக்காளிப்பழத்தை சாறெடுத்துக் கலந்து, பிறகு குளிக்கவும். உடல் துர்நாற்றம் நீங்கி, நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்.* எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வெந்நீரில் சிறிது உப்புப்போட்டு வாயைக் கொப்பளித்து வந்தாலும், வாய் துர்நாற்றம் நீங்கும்.* கற்றாழைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சி ஆகும்.* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால், நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
- இல.வள்ளிமயில், மதுரை.