சொல்லிட்டாங்க...

* தீவிரவாதமும், வன்முறையும் யாருக்கும் நல்லதல்ல. தீவிரவாதத்தினால் ஏற்படும் வலியை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

* அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அரசாணையில் கவர்னர் கையெழுத்திட்டது எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* வட்டிக்கு வட்டி சலுகை திட்டம் விவசாயிகள், அதுதொடர்பான தொழில் செய்வோர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாஜ அரசின் சதி திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: