ஜெய்ப்பூர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பதற்காக, ராஜஸ்தான் சட்டப்பேரவையிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மத்திய அரசு 3 சர்ச்சைக்குரிய புதிய வேளாண் சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு, நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த சட்டங்களை நிராகரித்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மசோதா நிறைவேற்றும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார்.